Wikipedia

Search results

Monday, April 1, 2013

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக் கூடாதவை. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.
அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் கஷ்ட மாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்கள். ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத் திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்புள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும்.

எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.

Friday, July 20, 2012

கண்கள் பல நிறங்களில் ஏன்?

கண்கள் பல நிறங்களில் ஏன்?
கண் கருவிழியின் நிறம் மனிதர் களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்து களின் செயல்பாடுகளை மனிதர் களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு (Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறு பாடுகளால் நிர்ணயம் செய்யப் படுகிறது. கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வெவ்வேறாக வேறுபடுகிறது.
உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரணமாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.
மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றன. மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம்(iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும்.
இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக் கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக் குதலேயாகும். வானம் நீல நிற மாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும்.
இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.

Wednesday, July 18, 2012

நேர்முகத் தேர்வு: அணுகும் முறை


நேர்முகத் தேர்வு: அணுகும் முறை
வேலைக்கு முயன்று கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு வார்த்தை `இன்டர்வியூ'
எல்லாம் தெரிந்தவர்கள் கூட வட்டமேசை மாநாடு மாதிரி ஒன்றுக்கு மூன்று அதிகாரிகளை பார்த்ததும் பதட்டத்தில் வார்த்தைகளை தொலைத்தவர்களாகி விடுகிறார்கள். தெரிந்த கேள்விக்கும் தெரியாத மாதிரி இவர்கள் `பய' அபிநயம் பிடிப்பது இப்போதும் தொடர் கதைதான்.
தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் இதில்தான் இருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந் திருப்ப தால் இம்மாதிரியான நேர்முகத் தேர்வுக்கு போகிறவர்கள் முதலிலேயே மனதுக்குள் ஒருவித படபடப்பை ஏற்றிக் கொண்டு விடுகிறார்கள். நாம் இயல்பாக இருக்க வேண்டும் என்று வீட்டில் தலைவாரி புறப்படும்போது மனதில் போட்ட தீர்மானம், நேர்முகத் தேர்வு அலுவலகப் படிக்கட்டில் கால் வைத்ததுமே மடிந்து போவது முதல் அத்தியாயம்.
உலகத்தலைவர்களின் பெயர்கள் தொடங்கி கடைசியாக சுதந்திரம் பெற்ற நாடுகள் வரை மனதில் புதைத்து எந்தக் கேள்வி என்றாலும் நான் ஓ.கே என்று புறப்பட்டுப் போகிறவர்களிடம், `நீங்கள் இந்த அலுவலகத்தில் எத்தனை படியேறி நேர்முகத் தேர்வுக்கு வந்தீர்கள்?' என்று கேட்பவர்களும் உண்டு. சுற்றுப்புறத்தை கவனிக்கிறீர்களா, உங்களைச் சுற்றியுள்ள இன்னொரு உலகம் உங்கள் பார்வையில் படுகிறதா என்பதற்காக இப்படியெல்லாம் கூட கேட்டு அதிர வைப்பார்கள். இம்மாதிரியான சமயங்களில் பதில் தெரியவில்லை என்றால் `தெரியாது' என்பதையே பதிலாக்குங்கள். அதை விடுத்து தெரிந்த பதில் போலவும், அப்போதுதான் மறந்த மாதிரியும் நடிக்காதீர்கள். நேர்முகத் தேர்வுக்காக காத்திருக்கும் அறைக்குள் அழைக்கப்படுகிறீர்கள்.
நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரிகளை நேரில் சந்திப்பது. அறைக்குள் அழைக்கப்பட்டதுமே பதற்றம் இல்லாமல் அறைக்குள் நுழையுங்கள். உங்களை அழைத்து விட்டார்கள் என்பதற்காக தள்ளுகதவைத் தள்ளிக் கொண்டு நேரடியாக உள்ளே நுழைந்து விடாதீர்கள். `மே ஐ கம் இன் சார்?' என்று நாகரிகமாக கேட்டபடி அறைக்குள் நுழையுங்கள். உள்ளே நுழைகிற அந்தக் கணம் முதலே நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். சரியாக சொல்லவேண்டும் என்றால், அந்தக்கணம் முதலே உங்களுக்கு நேர்முகத் தேர்வு ஆரம்பம் ஆகி விட்டதாகத்தான் பொருள். நீங்கள் அறைக்குள் எப்படி வருகிறீர்கள்? அதிகாரிகளை பார்த்து எப்படி வணக்கம் வைக்கிறீர்கள் என்பது முதல் உங்கள் தேர்வின் தொடக்கம்.
சில கேள்விகள் உங்களுக்கு சட்டென்று புரியாமல் இருக்கலாம். அதை `புரியவில்லை. தயவு செய்து திரும்பவும் கூற முடியுமா?' என்று கேட்டு அதன்பிறகு உங்கள் பதிலை சொல்லலாம். ஒருவேளை அந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால், விடை தெரிய வில்லை என்பதை தயக்கமின்றி கூறுங்கள். எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை. எனவே அவர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்றிரண்டுக்கு பதில் தெரியாத பட்சத்தில் `தெரியவில்லை சாரி' என்று கூறி விடலாம்.
ஒருவேளை தெரியாது என்று சொல்லி விட்டால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து கொண்டு சிலர் தவறான விடைகளை கூற முயற்சிக்கலாம். அது `ஒத்தையா ரெட்டையா' கதையாக அமைந்து உங்கள் வெற்றிக்கான வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும். அய்ந்து நிமிடம் தேர்வாளர்கள் இப்படி உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் `சமாளிப்பாளரா? நேர்மையாக அணுகுபவரா' என்பதை கணித்து விடுவார்கள். கேள்விகள் முடிந்தது என்று அவர்கள் அறிவித்ததும், மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு புறப்படுங்கள்.