உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக் கூடாதவை. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.
அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச்
சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே
அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும்
நிலையை உருவாக்குகிறது.
எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு
பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப்
பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்.
ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை
கடினமாக்கி செரிமானத்தைக் கஷ்ட மாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை
தளர்த்தி விடாதீர்கள். ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில்
குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
வயிற்றுக்குச் செரிமானத் திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும்
வாய்ப்புள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச்
செய்யக்கூடும்.
சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று
சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்
(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை
உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான
உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத்
தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல்
செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும்.
எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது
இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர்
உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம்
கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.