இந்தியாவில் இயங்கும் அரசுத்துறை சார்ந்த, தனியார் துறை சார்ந்த வங்கிகள், என்.பி.எப்.சி., மற்றும் இதர நிதி நிறு வனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பாரத ரிசர்வ்வங்கி எனப்படும் ஆர்.பி.அய்., திகழ்கிறது. மத்திய நிதிய மைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கு நாடெங்கும் முக்கிய நகரங்களில் மட்டுமே கிளைகள் உள் ளன. இந்த கிளைகளில் உள்ள 525 உதவி யாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தக் காலி இடங் களுக்கு அரசு நிபந்தனைகளின் படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
காலி இட விபரங்கள்: ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களான ஆமதாபாத்தில் 25ம், பெங்களூருவில் 31ம், போபாலில் 25ம், புவனேஸ்வர் மற்றும் சண்டிகாரில் தலா 20ம், சென்னையில் 35ம், கவுகாத்தியில் 25ம், அய்தராபாத்தில் 23ம், ஜெய்பூரில் 17ம், ஜம்முவில் 16ம், கான்பூர் மற்றும் லக்னோவில் 25ம், கோல்கட்டாவில் 50ம், மும்பையில் 131ம், நாக்பூரில் 15ம், புது டில்லியில் 28ம், பாட்னா வில் 24ம் மற்றும் திருவனந்தபுரம்/கொச்சி யில் 15ம் உதவியாளர் காலி இடங்கள் நிரப்பப் பட உள்ளன.
ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட உதவியாளர் காலி இடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.05.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பி யவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித் திருக்க வேண்டும்.
இத்துடன் கணினியில் வேர்டு பிராசசிங் தொடர்புடைய திறனும் பெற்றிருக்க வேண் டும். எந்த மாநிலத்திலுள்ள காலி இடங் களுக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநில ஆட்சி மொழியில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/-அய் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த இடங்கள் ஆன்-லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்-லைன் முறை யிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான தகவல்களை இணைய தளத்திலிருந்து அறியவும்.
முழுமையான தகவல்களை இணைய தளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.06.2013
ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள்: 20.07.2013,21.07.2013,27.07.2013,28.07.2013
No comments:
Post a Comment